Category Archives: ஆட்டோ மொபைல்
சக்கரம் தான் அனைத்திற்கும் முன்னோடி.
உலகின் பிரசித்திப்பெற்ற வாகன தயாரிப்பாளர்கள்…
01 . நிக்கோலஸ் ஆகஸ்ட் ஓட்டொ என்பவர் தான் , உலகின் தற்ப்பொழுது உள்ள வாகன எஞ்ஜினின் முன்னோடியாவார் . 1876 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஆகஸ்ட் ஓட்டொ வாயுக்கள் மூலமாக இயக்க கூடிய ஒரு எஞ்ஜினை கண்டுபிடித்தார் . அதன் பின் அவர் , ஓட்டோ சைக்கிள் எஜ்ஜின் என்று அழைக்கப்படும் நான்கு ஸ்ட்ரோக் எஞ்ஜினை கண்டுபிடித்தார் .
02 . கார்ல் பென்ஸ் என்ற ஜெர்மன் நாட்டை சேர்ந்த் அறிவியலார் , 1885 ஆம் ஆண்டு உலகின் முதல் நடைமுறை சாத்தியத்திற்க்க ஏற்ப ஒரு வாகனத்தை கண்டுபிடித்தார் .இதில் எஞ்ஜின்கள் உள் கட்டமைப்புடன் பொருத்தப்பட்டு இருந்தது .
03 . கோட்டிலியப் டெய்ம்லர் என்வர் 1885 ஆம் ஆண்டு உலகின் முதன் நான்கு சக்கரங்கள் உடைய நான்கு ஸ்ட்ரோக் எஞ்ஜின் வாகனத்தை கண்டுபிடித்தார் . இதுவே உலகில் தற்பொழுது இருக்கும் கார்களின் முன்னோடியாகும் .
04 . 1891 ஆம் ஆண்டு ஜான் லாம்பெர்ட் என்பரால் கேஸலின் மூலம் இயங்ககூடிய வாகன இயந்திரத்தை கண்டுபிடித்தார் . இதுதான் அமெரிக்காவின் முதல் கேஸலின் சக்தியினால் இயக்ககூடிய முதல் இயந்திரமாகும் .
05 . டுர்யே பிரதர்ஸ் என அழைக்கபடும் சார்லஸ் டுர்யே மற்றும் ஃப்ரான்க் டுர்யே என்பவர்களால் , அமெரிக்காவின் முதல் வியாபாரத்திற்க்கான வாகனத்தை உருவாக்கினர் . இந்த வாகனம் கேஸலின் சக்தியினால் இயங்ககூடிய வாகனமாகும் .இவர்கள் ஆரம்பத்தில் சைக்கிள் தயாரிப்பாளர்களாக இருந்தனர் . அந்த சமையத்தில் தான் அவர்கள் இந்த புது கண்டுபிடிப்பை நிகழ்த்தினர் .
06 . ஹென்றி ஃபோர்ட் என்பர் ( மாடல் T ) என்ற எஞ்ஜின்கல் உடைய வாகனத்தினை நெரிமுறைபடுத்தினார் .இவர் 1863 ஆம் ஆண்டு பிறந்தார் . சிறு பிள்ளையில் இருந்தே அவர் வாகனகள் கண்டுபிடிப்பில் ஆர்வமுடையவராக இருந்தார் .
07 . ருடோல்ஃப் டீசல் என்பவர் உலகின் முதல் டீசல் மூலம் இயக்ககூடிய internal combustion engine என்ற ஒரு வாகன பாகத்தை கண்டுபிடித்தார் .
08 . சார்லஸ் ஃப்ராக்லின் கெட்டரிங் என்பவர் , உலகின் முதல் electrical ignition system என்ற ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் . இதுதான் இன்று உள்ள வானக அமைப்புகளின் முன்னொடியாக இருக்கிறது .
ஆட்டோ கட்டண விவரம்…
நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு, சென்னையில் இயங்கும் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்து ஆக.,25ம் தேதி அறிவித்தது. குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் (1.8 கி.மீ.,) 25 ரூபாய், ஒவ்வொரு கூடுதல் கி.மீ.,க்கும் 12 ரூபாய் (ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 1.20 ரூபாய்), காத்திருப்பதற்கு 5 நிமிடத்துக்கு 3.50 ரூபாய், இரவு நேரத்தில் (இரவு 10:00 மணி முதல், அதிகாலை 5:00 மணி வரை) நிர்ணயித்துள்ள கட்டணத்தில் 50 சதவீதம் அதிகம் வசூலிக்கவும் அரசு அனுமதித்துள்ளது. இக்கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.